ஆப்நகரம்

4 இளைஞர்கள் பலிக்கு சுவாதியின் ஆவி காரணமா?

சென்னை நுங்கம்பாக்கம் அருகே மின்சார ரயிலில் அடிபட்டு வடமாநிலத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இன்று பரிதாபமாக இறந்தனர்.

TOI Contributor 7 Sep 2016, 6:08 pm
சென்னை நுங்கம்பாக்கம் அருகே மின்சார ரயிலில் அடிபட்டு வடமாநிலத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இன்று பரிதாபமாக இறந்தனர்.
Samayam Tamil is swathis ghost behind the 4 persons death at railway track
4 இளைஞர்கள் பலிக்கு சுவாதியின் ஆவி காரணமா?


இதற்கு, சமீபத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சுவாதியின் ஆவி அந்தப் பகுதியில் அலைவதால்தான் இதுமாதிரி நடக்கிறது என்று சிலர் பேசிச் சென்றதும், சமூக வலைதளங்களில் இந்த செய்தியை பதிவு செய்ததும் அதிர்ச்சியை மட்டுமின்றி மற்றவர்களுக்கு திகைப்பையும் அளித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பணிக்கு செல்ல ரயிலுக்காக காத்திருந்த சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

விசாரணைக்கு அழைத்து செல்லும்போது பல முறை நுங்கம்பாக்கம் போலீஸ் ஜீப்பில் ராம் குமார் அழைத்து செல்லப்பட்டார். அந்த ஜீப் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலைய வாசலில் நிறுத்தப்பட்டு இருந்தது. சமீபத்தில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற நடிகர் அருண் விஜய் அந்த ஜீப் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதற்கு காரணம் சுவாதியின் ஆவி அந்த ஜீப்பை பின் தொடர்வதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியானது.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே இன்று 4 இளைஞர்கள் ரயில் மோதி இறந்து இருப்பதற்கும், சுவாதியின் ஆவிதான் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் -சேத்துப்பட்டுக்கு இடையிலான ரயில் பாதையில் நடந்த இந்த விபத்தில் நான்கு பேர் பலியாகினர்.
முதல் கட்ட விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கூலி வேலை செய்பவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

அடுத்த செய்தி