ஆப்நகரம்

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேந்த 11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் புதிய தகவல்!

டெல்லியில் உள்ள புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரணம் தற்கொலை அல்ல, அது ஒரு விபத்து தான் என தடயவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Sep 2018, 5:57 pm
டெல்லி : டெல்லியில் உள்ள புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரணம் தற்கொலை அல்ல, அது ஒரு விபத்து தான் என தடயவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil burari


ஜூலை 1ம் தேதி டெல்லி புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். நாட்டையே திரும்பி பார்க்க வைத்த இந்த சம்பவம் பெரும் அச்சமடைய செய்தது.

இன்றளவும் அந்த வீட்டை கடந்து செல்ல அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தான் செல்வதாக கூறுகின்றனர்.

இந்த மரணத்துக்கு என்ன காரணம் என போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும் விசாரணை செய்தனர். ஆனால் தற்கொலைக்கன சரியான கார்ணம் தெரியாமல் இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர்.

உளவியல் அறிக்கை;

இந்நிலையில் உளவியல் ரீதியாக நடத்தப்பட்ட ஆய்வில், அந்த சம்பவம் தற்கொலை அல்ல, அது ஒரு விபத்து என தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி