ஆப்நகரம்

திருமணத்திற்கு வயது ஒரு தடையா; 45 வயது பெண்ணை மணந்த 65 வயது முதியவர்!

வயது முதிர்வில் நிகழ்ந்த திருமணம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 20 Jun 2018, 3:53 pm
கொல்கத்தா: வயது முதிர்வில் நிகழ்ந்த திருமணம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil Kolkata Marriage


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பிரஷந்தா கோஷ்(65) திருமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளார். அவருக்கு சரியான ஜோடி கிடைத்துள்ளது. அதாவது மணமகள், பாப்லி சர்காரின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து அடுத்த திருமணத்திற்காக காத்திருந்தார். இருவரும் செய்தித்தாள் விளம்பரம் மூலம் ஒன்றிணைந்துள்ளனர். முதல் மனைவி இறந்த பிறகு, தனது தனிமையை போக்க பிரஷந்தா முடிவு செய்தார்.

இதற்காக வயது முதிர்ந்த நிலையிலும், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். கடந்த மே 30ஆம் தேதி, இருவரும் பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரஷந்தாவில் வர முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி, பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து வடக்கு 24 பர்கானாவின் மந்த்யாம்கிராம் இல்லத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

It's never too late! 65yr old got married to get rid of his loneliness.

அடுத்த செய்தி