ஆப்நகரம்

மனைவிக்கு புடவை வாங்கித் தர வேண்டும்: நீதிபதியின் வினோத தீர்ப்பு

இந்தூர் அருகே விசாரணைக்கு வந்த விவாகரத்து வழக்கில் வினோதமாக ஆலோசனைக் கூறி கணவன், மனைவியை இணைக்க நீதிபதி புது யுக்தியை பயன்படுத்தியுள்ளார்.

TNN 7 Jul 2016, 2:54 pm
இந்தூர்: இந்தூர் அருகே விசாரணைக்கு வந்த விவாகரத்து வழக்கில் வினோதமாக ஆலோசனைக் கூறி கணவன், மனைவியை இணைக்க நீதிபதி புது யுக்தியை பயன்படுத்தியுள்ளார்.
Samayam Tamil judge asks hubby to gift wife sari to deepen bond
மனைவிக்கு புடவை வாங்கித் தர வேண்டும்: நீதிபதியின் வினோத தீர்ப்பு


கார்கோன் நீதிமன்ற அறைக்கு வந்த சஞ்சு-ராணு விவாகரத்து மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கசரண் துபே, சினிமா காட்சி போன்று ஒரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். விவாகரத்து பெறுவதற்காக குடும்பநல நீதிமன்றத்தை நாடிய சஞ்சு, அவரது மனைவிக்கு புதிய புடவை வாங்கித் தர வேண்டும். அடுத்த விசாரணையின் போது ராணுவை கவரும் வகையில் பேச வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று, சஞ்சு, தனது மனைவிக்காக புதிய புடவை ஒன்றை வாங்கிக் கொடுத்து, நீ இந்த புடவையில் மிகவும் அழகாக இருப்பதாகக் கூறி காதல் வசனம் பேசியுள்ளார். இவ்வழக்கை விசாரிக்கையில், மனைவி ராணு தனிமையாய் உணர்வதாகவும், ஒதுக்கப்படுவதாகவும் உணர்ந்துள்ளார்.

இதையறிந்த நீதிபதி, விவாகரத்து கேட்டு வந்த சஞ்சு, ராணுவை ஷாப்பிங் கூட்டிச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கும்போது, தினமும் கடுமையாக உழைக்கும் பெண் ஆதரவாக வேண்டுவது பாசமும், பாராட்டும் மட்டுமே என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி