ஆப்நகரம்

கர்நாடகா போலீஸையே காரில் தீவைத்து எரித்த கொடூரம்!

இந்து வாலிபர் கொலையால் ஏற்பட்ட வன்முறையை பார்வையிட சென்ற கர்நாடகா காவல்துறை ஐஜியை காரோடு சேர்த்து தீ வைத்துள்ளனர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

TNN 11 Dec 2017, 7:51 pm
கர்நாடகா: இந்து வாலிபர் கொலையால் ஏற்பட்ட வன்முறையை பார்வையிட சென்ற கர்நாடகா காவல்துறை ஐஜியை காரோடு சேர்த்து தீ வைத்துள்ளனர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
Samayam Tamil karnataka ig and his car was set on fire by a ferocious bjp mob
கர்நாடகா போலீஸையே காரில் தீவைத்து எரித்த கொடூரம்!


கர்நாடகா மாநிலம் உத்தர கரநாடக மாவட்டத்தில் உள்ள கும்டா என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது இந்து இளைஞரை படுகொலை செய்ததால், அங்கு வன்முறை ஏற்பட்டது. கொலைக்கு பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பே காரணம் என்று பாஜகவினர் கலவரம் செய்து வருகின்றனர்.

கலவரம் தீவிரமானதால் அதைப் பார்வையிட மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ஹேமந்த நிம்பால்கர், போலீஸ் வாகனத்தில் சென்றுள்ளார். அங்கு அவரோடு சேர்த்து அவரது காரை கலவரக்காரர்கள் தீவைத்து கொளுத்தினர். அதிர்ஷ்டவசமாக அவரும் அவருடன் அந்த காரில் இருந்த பாதுகாப்பு காவலரும் இதிலிருந்து உயிர்தப்பினர். இருப்பினும், கார் முழுவதும் தீக்கிரையானது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்பு நிலவி வருகிறது.

அடுத்த செய்தி