பெங்களூரு : இன்று நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட கர்நாடகா அமைச்சர் ஆர்.வி தேஷ்பாண்டே வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா மாநில வருவாய் துறை அமைச்சர் ஆர்.வி தேஷ்பாண்டே, அவரது தொகுதியான கர்வார் பகுதியில் உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து, விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை பரிசாக அளித்தார்.
பிச்சையா போடுறீங்க?
இந்த விழாவிற்காக மாநிலம் முழுவதிலிருந்து மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர்.
விளையாட்டு வீரர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் பிளாஸ்டிக் கவரில் கட்டப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்படி விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர் ஆர்.வி தேஷ்பாண்டேவை பரிசு கொடுக்க அழைத்த போது, விளையாட்டு உபகரணத்தை வீரர்களுக்கு தூக்கி எறிந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. வீரர்களுக்கு பிச்சையா போடுகிறார்? ஏன் இப்படி தூக்கி எறிகிறார் என பலரும் விமர்சித்துள்ளனர்.
முன்னதாக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.டி. ரெவன்னா, வெள்ளம் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தை பார்வையிடச் சென்ற போது, மக்களுக்கு உணவுப் பொட்டளங்களை தூக்கி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போது அந்த அமைச்சர் கண்டிக்கப்பட்டதை கூட நினைவில் வைத்துக் கொள்ளாமல் மீண்டும் ஒரு அமைச்சர் மோசமான செயலை செய்தது வறுத்தத்திற்குரியதாக மக்கள் பார்க்கின்றனர்.
கர்நாடகா மாநில வருவாய் துறை அமைச்சர் ஆர்.வி தேஷ்பாண்டே, அவரது தொகுதியான கர்வார் பகுதியில் உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து, விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை பரிசாக அளித்தார்.
பிச்சையா போடுறீங்க?
இந்த விழாவிற்காக மாநிலம் முழுவதிலிருந்து மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர்.
விளையாட்டு வீரர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் பிளாஸ்டிக் கவரில் கட்டப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்படி விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர் ஆர்.வி தேஷ்பாண்டேவை பரிசு கொடுக்க அழைத்த போது, விளையாட்டு உபகரணத்தை வீரர்களுக்கு தூக்கி எறிந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. வீரர்களுக்கு பிச்சையா போடுகிறார்? ஏன் இப்படி தூக்கி எறிகிறார் என பலரும் விமர்சித்துள்ளனர்.
முன்னதாக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எச்.டி. ரெவன்னா, வெள்ளம் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தை பார்வையிடச் சென்ற போது, மக்களுக்கு உணவுப் பொட்டளங்களை தூக்கி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போது அந்த அமைச்சர் கண்டிக்கப்பட்டதை கூட நினைவில் வைத்துக் கொள்ளாமல் மீண்டும் ஒரு அமைச்சர் மோசமான செயலை செய்தது வறுத்தத்திற்குரியதாக மக்கள் பார்க்கின்றனர்.