ஆப்நகரம்

” விளையாட்டு வினையானது”: தூக்கில் தொங்குவது போல போட்டோ எடுக்க ஆசைப்பட்டு உயிருக்கு போராடும் சிறுவன்..!

தூக்கில் தொங்குவது போல புகைப்படம் எடுக்க ஆசைப்பட்ட இளைஞர், எதிர்பாராதவிதமாக தூக்கில் சிக்கி உயிருக்கு போராடி வருகிறார்.

TNN 23 Apr 2017, 2:15 pm
தூக்கில் தொங்குவது போல புகைப்படம் எடுக்க ஆசைப்பட்ட இளைஞர், எதிர்பாராதவிதமாக தூக்கில் சிக்கி உயிருக்கு போராடி வருகிறார்.
Samayam Tamil karnataka teen imitates hanging and makes himself into trouble
” விளையாட்டு வினையானது”: தூக்கில் தொங்குவது போல போட்டோ எடுக்க ஆசைப்பட்டு உயிருக்கு போராடும் சிறுவன்..!


கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த விகாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 15 வயது சிறுவன், தற்கொலைக்கு முயல்வது போல தனது நண்பன் விளையாட்டாக அனுப்பியிருந்த வாட்ஸ் ஆப் போட்டோவை பார்த்துள்ளான். இதே போன்ற ஒரு போட்டோவை எடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும் என்ற ஆசை விகாசுக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது நண்பனை அழைத்துக் கொண்டு, தன் வீட்டில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்கு விகாஷ் சென்றுள்ளான். பின்னர் தூக்கு கயிறு ஒன்றை அங்கிருந்த மேற்கூரையில் கட்டிவிட்டு,அதில் தனது தலையை நுழைத்து அந்த காட்சியை தனது நண்பனிடம் புகைப்படம் எடுக்க கூறியுள்ளான்.

அப்போது எதிர்பாராத விதமாக விகாஸ் நின்று கொண்டிருந்த நாற்காலி தவறி கீழே விழுந்துள்ளது. இதனால் தூக்குக் கயிற்றில் விகாஸ் மாட்டிக் கொண்டுள்ளான். வலியால் தூக்குக் கயிற்றில் துடித்த விகாசை பார்த்த அவனது நண்பன், அலறி அடித்துக் கொண்டு அக்கம் பக்கத்து வீட்டினரை உதவிக்கு அழைத்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்த சிலர், விகாசை தூக்குக் கயிற்றில் இருந்து காப்பாற்றி, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் விகாசின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Karnataka Teen imitates hanging and makes himself into trouble

அடுத்த செய்தி