ஆப்நகரம்

சேவல்களை பிடித்து சிறையிலடைத்த கரூர் போலீஸ்!

கரூர் மாவட்டத்தில் போலீசார் சேவல்களை கைது செய்து சிறையிலடைத்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 17 Jan 2018, 3:07 pm
கரூர் மாவட்டத்தில் போலீசார் சேவல்களை கைது செய்து சிறையிலடைத்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil karoor police arrested rooster
சேவல்களை பிடித்து சிறையிலடைத்த கரூர் போலீஸ்!


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் கிறிக்காரன்பட்டி. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை போல, கிறிக்காரன்பட்டியில் சேவல்கட்டு பிரசித்தம். ஆனால் சேவல்கட்டு போட்டியில் சேவல்களை துன்புறுத்துவதாகவும், எதிரிகளின் சேவல்களை வீழ்த்துவதற்காக, காலில் விஷக்கத்தி மாட்டி விடுவதாகவும், சேவலுக்கு சரக்கு ஊற்றிக் கொடுப்பதாகவும் கூறி, இரண்டு வருடங்களுக்கு முன்பு சேவல்கட்டு போட்டியை நடத்த காவல்துறையால் தடை விதிக்கப்பட்டது.



இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல்துறையின் உத்தரவை மீறி கிறிக்காரன்பட்டியில் சேவல்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனையறிந்த போலீசார் போட்டியில் பங்கேற்ற 5 சேவல்களின் கால்களை கயிற்றால் கட்டி, காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று சிறையிலடைத்தனர்.

இதுகுறித்து கிறிக்காரன்பட்டி மக்கள் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டியைப் போல சேவல்கட்டி போட்டியும் நமது பாரம்பரியம் என்றும், ஜல்லிக்கட்டு விளையாட்டால் உயிர் போகும் ஆபத்து இருக்கிறது. ஆனால் சேவல்கட்டு போட்டியில் அப்படி எந்த ஆபத்தும் இல்லை என்று கூறியுள்ளனர். சேவல்கட்டு தடையை உடனே நீக்க வேண்டும் எனவும், சிறையிலடைத்த சேவல்களை உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி