ஆப்நகரம்

பள்ளியிலேயே ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டங்களைப் பெற்ற கரூர் அரசுப் பள்ளி மாணவர்கள்!!

கரூரில் உள்ள அரசுப்பள்ளியில், மாணவர்களை ஊக்குவிக்க அவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டம் கொடுக்கப்படுகிறது.

Samayam Tamil 12 Oct 2018, 1:54 pm
கரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்குப் படிக்கும் போதே ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டங்கள் கொடுத்து, அவர்களை ஊக்குவித்து வருகின்றனர்.
Samayam Tamil பள்ளியிலேயே ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டங்களைப் பெறும் கரூர் அரசுப் பள்ளி மாணவர்கள்!!
பள்ளியிலேயே ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டங்களைப் பெறும் கரூர் அரசுப் பள்ளி மாணவர்கள்!!


பொதுவாக பள்ளிகளில் படிக்கும்போது, நம் எல்லோரிடமும் நாம் என்னவாக விரும்புகிறோம் என கேட்கப்படும். அதற்கு பலரும் கலெக்டர், டாக்டர், போலீஸ் என கூறுவோம். அதன்பின், அந்தக் கனவுகளை எட்டிப்பிடித்தோமா என்று கேட்டால், பெரும்பாலானோர் கூறும் விடை இல்லை என்பதாகத்தான் இருக்கும். ஒரு சிலர் மட்டுமே, தாங்கள் விரும்பிய இலக்கை கஷ்டப்பட்டு முயற்சி செய்து அடைகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, கரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்று, மாணவர்கள் சிறுவயதிலேயே தங்கள் மனதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் என இலக்கு வைக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டம் வழங்கியுள்ளது.

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மாணவர்களின் பெயர்களுக்கு முன் கனி, மரம் மற்றும் அறிஞர்களின் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வகுப்புக்கும் பொதுஅறிவு தேர்வு வைத்து அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டம் வழங்கப்படுகின்றன.

பள்ளியிலேயே ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டங்களைப் பெற்ற கரூர் அரசுப் பள்ளி மாணவர்கள்!!


அப்படி ஐஏஎஸ், ஐபிஎஸ் பட்டங்கள் பெற்ற மாணவர்களுக்கு தனி அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. அம்மாணவர்கள் வகுப்பறை பராமரிப்பு பள்ளி வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் உள்ளிட்டவற்றில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து, பள்ளியின் தலைமையசிரியரான மூர்த்தி மாணவர்களின் வளர்ச்சிக்காக கணினி வசதி, சீருடை வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி