ஆப்நகரம்

கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கு வித்திட்ட பள்ளி மாணவர்கள்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி களத்தை முதலில் அடையாளம் கண்டு சொன்னது பள்ளி மாணவர்கள்தான் என்று கீழடி ஆராய்ச்சியின் முன்னோடியும் ஆசிரியருமான வை.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

TNN 9 Jul 2017, 2:06 pm
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி களத்தை முதலில் அடையாளம் கண்டு சொன்னது பள்ளி மாணவர்கள்தான் என்று கீழடி ஆராய்ச்சியின் முன்னோடியும் ஆசிரியருமான வை.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Samayam Tamil keezhadi excavation field initially discovered by school students
கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்கு வித்திட்ட பள்ளி மாணவர்கள்!


சிவகங்கை அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய வை.பாலசுப்பிரமணியன், “1974 முதல் 1982 வரை கீழடியில் நான் வரலாற்று ஆசிரியராகப் இருந்தபோது என் பள்ளி மாணவர்கள், தற்செயலாகக் எடுந்து வந்து தொல்லியல் பொருள்கள் மூலமாகத்தான் கீழடியில் அகழ்வாராய்ச்சி பெரிய அளிவில் நடைபெற்று வருகிறது.” என்று கூறியுள்ளார்.

“பந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள தமிழர்களின் நகர நாகரீகம், பண்பாடு என அனைத்துக்கும் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன. இதனால்தான் கீழடி அகழ்வாராய்ச்சி முக்கியத்துவமானதாக உள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கிய முதற்கட்ட ஆய்வில் 1,800 பொருட்களும், 2016ஆம் நடந்த இரண்டாம் கட்ட ஆய்வில் 3,550 பொருட்களும் கிடைத்துள்ளன. அவற்றில் பழங்கால தமிழர்களின் பெயர்கள், வர்ண்ம் தீட்டப்பட்ட தட்டு, மண்குவளை, சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைக் கட்டைகள் உள்ளிட்டவை அடங்கும்.



விலங்குகளின் கொம்புகளால் ஆன ஈட்டி, யானை தந்தத்தினாலான சீப்பு, தாயக்கட்டை, காதணிகள் உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன. இவற்றின் வாயிலாக, மூன்றாம் நூற்றாண்டிலேயே மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களுக்கு இணையான நாகரிகம் அடைந்த மக்கள் தமிழகத்தில் வாழ்ந்ததற்கான சான்று கிடைத்துள்ளது.

நான்கரை ஏக்கர் பரப்பளவில் 10 ஆண்டுகளுக்கு இந்த அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணி, மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில கடந்த மே 27ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 3 தொல்லியலாளர்கள் மற்றும் குழி தோண்டுவதற்காக 20 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி