ஆப்நகரம்

”தாய்மொழியில் பேசினால் தண்டனை”:கேரளாவில் நடந்த கொடுமை..!

ஆங்கிலத்தில் பேசாமல் ‘அய்யோ’ என்ற தாய் மொழி வார்த்தையை பயன்படுத்தியதால்,ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு தண்டனை அளித்துள்ளது கேரளாவைச் சேர்ந்த பள்ளி ஒன்று.

TNN 24 Dec 2016, 9:04 am
ஆங்கிலத்தில் பேசாமல் ‘அய்யோ’ என்ற தாய் மொழி வார்த்தையை பயன்படுத்தியதால்,ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு தண்டனை அளித்துள்ளது கேரளாவைச் சேர்ந்த பள்ளி ஒன்று.
Samayam Tamil kerala child punished for speaking mother tongue at ernakulam school
”தாய்மொழியில் பேசினால் தண்டனை”:கேரளாவில் நடந்த கொடுமை..!


கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் சாம்பியன் ஆங்கிலப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்பது கடுமையான விதியாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவன்,எதிர்பாரதவிதமாக இருக்கையிலிருந்து கீழே விழுந்துள்ளான்.கீழே விழுந்த வலியில் ’அய்யோ’ என்ற மலையாள வார்த்தையை பயன்படுத்தியுள்ளான்.இதனை கண்டு கோபமுற்ற பள்ளி ஆசிரியர்,’நான் மலையாளம் பேச மாட்டேன்’ என ஆங்கிலத்தில் 50 முறை எழுதி வரச் சொல்லி அந்த மாணவனுக்கு தண்டனை அளித்துள்ளார்.

மாணவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து அறிந்த மாணவனின் தந்தை,இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக இதுவரை தங்களுக்கு புகார் ஏதும் வரவில்லை என சாம்பியன் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Kerala child punished for speaking mother tongue at Ernakulam school

அடுத்த செய்தி