ஆப்நகரம்

அரசு காரில், பணி நேரத்தில் நடிகையுடன் பயணம் செய்த காவல்துறை அதிகாரி சிக்கினார்!

அரசு காரில், பணி நேரத்தில் நடிகையுடன் பயணம் செய்த காவல்துறை அதிகாரி சிக்கினார்!

TOI Contributor 24 May 2017, 4:56 am
அரசிற்கு சொந்தமான காரில் நடிகையுடன் பயணம் மேற்கொண்ட காவல்துறை அதிகாரி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil kerala police officer travel with actress in government car during duty time
அரசு காரில், பணி நேரத்தில் நடிகையுடன் பயணம் செய்த காவல்துறை அதிகாரி சிக்கினார்!


கேரள மாநில சிறைத்துறை டிஐஜியாக பணியாற்றி வரும் பிரதீப் தனது சொந்த தேவைக்காக அரசு காரை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் மாதம் சிறை நாள் கொண்டாட்டத்தின் போது காவல் அதிகாரி பிரதீப் நடிகை ஒருவருடன் அரசு காரில் வந்துள்ளார். பத்தனம்திட்டாம் வரும் வழியில் இவர் அரசு கொடுத்துள்ள காரில் நடிகை ஒருவருடன் வந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த சிறைத்துறை ஐஜிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறைத்துறை தலைமை அதிகாரியான ஸ்ரீலேகா, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு முழு அறிக்கை தரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி