ஆப்நகரம்

வேன் கதவில் துப்பட்டா சிக்கி பெண் பலி!

கேரளா குழித்துறையில் வேன் கதவில் துப்பட்டா சிக்கி பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 31 May 2018, 12:50 pm
கேரளா குழித்துறையில் வேன் கதவில் துப்பட்டா சிக்கி பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Samayam Tamil kerala woman dupatta


கேரளா மாநிலம் நெய்யாற்றின் கரையை அடுத்துள்ள உதயன்குளங்கரை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரவி(45) - மஞ்சு(40). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்களாகியும் குழந்தை இல்லாமல், தற்போது தான் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மஞ்சு, திற்பரப்பு பகுதியில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். தொடர்ந்து, தனது சொந்த ஊரான குழித்துறைக்கு வேனில் சென்றார். பின்னர், குழித்துறையில் வீட்டின் அருகே வேனில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது துப்பட்டா வேன் கதவல் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட மஞ்சு, துப்பட்டாவை பிடித்து இழுத்தார்.

ஆனால், மஞ்சுவின் நிலைமையை அறியாத டிரைவர் வேனை ஓட்டத் தொடங்கினார். துப்பட்டா வேன் கதவில் மாட்டிக் கொண்டதால், மஞ்சு நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலைமையில் பலத்த அடிபட்டது. உடனே அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து மஞ்சுவை பரிசோதித்த குழித்துறை மருத்துவமனை மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். வேன் கதவில் துப்பட்டா சிக்கி மஞ்சு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி