ஆப்நகரம்

திருமணத்திற்கு பின் பல பெண்களுடன் பழக்கம்; கணவனை தட்டிக் கேட்ட மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

பிற பெண்களுடன் இருந்த பழக்கத்தை தட்டிக் கேட்டதால், தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து, பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 13 Mar 2019, 4:38 pm
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அனுமன் நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் டாக்டர் வினிதா(35). இவருக்கும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராகுல் பட்டேல் என்பவருக்கும், கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
Samayam Tamil Torchure


இவர்கள் திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகமாகி, மணமுடித்துக் கொண்டனர். இந்நிலையில் திருமணத்திற்கு பின், ராகுலிற்கு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து வினிதா அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு, அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. மேலும் தனது மனைவியை உடல்ரீதியாக ராகுல் படேல் துன்புறுத்தியுள்ளார்.

இதனால் கோபித்துக் கொண்டு, தனது தாய் வீட்டிற்கு வினிதா சென்றுள்ளார். இந்த சூழலில் ராகுல் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் வினிதா தந்தையின் ஓய்வு பெற்ற பின் வழங்கப்பட்ட தொகையை தெரிந்து கொண்டு, அதனை முழுமையாக அளிக்குமாறும் வற்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி