ஆப்நகரம்

2 வது திருமணம் செய்த மனைவி: கணவர் உருக்கம்

கணவர் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக கூறி பெண் என்ஜினீயர் 2-வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

TNN 14 Sep 2017, 8:43 pm
கணவர் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக கூறி பெண் என்ஜினீயர் 2-வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil lady marry secondly without informing his husband in tirunelveli
2 வது திருமணம் செய்த மனைவி: கணவர் உருக்கம்


நெல்லை டவுனை அடுத்த மேலகுன்னத்தூர் நல்லம்மாள் கட்டளை தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் குமார். இவர் உடையார்பட்டியில் உள்ள ஒரு நான்கு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் ஒர்க்‌ஷாப்பில் ‘மெக்கானிக்காக‘ வேலை செய்து வருகிறார். 2010-ம் ஆண்டு இவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பிய இவரது பெற்றோர், பெண் பார்த்து வந்தனர்.

எர்னாகுளத்தை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணை அவரது வீட்டர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்று மனைவி ஆசைக்காக அவரை படிக்க வைத்தார்.

4 வருடங்கள் தனது படிப்பை முடித்த தனலட்சுமி மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு சரியான பொருளாதாரம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார்.

இந்த வேளையில் அந்த பெண்ணின் தாய் அவளை தனது வீட்டில் வைத்து படிக்கவைப்பதாக குமாருக்கு வாக்கு கொடுத்தார்.
இதனை நம்பி அவரும் தனது மனவியை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவரது தாய் அவருக்கு வேறு மாப்பிளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை டவுனில் உள்ள தனலட்சுமியின் உறவினர் ஒருவர் குமாரை யதேச்சையாக பார்த்துள்ளார். இறந்து விட்டதாக கூறியவர், உயிருடன் உள்ளாரே என்று அவர் அதிர்ச்சி அடைந்து குமாரை சந்தித்து பேசினார். நீங்கள் இறந்து விட்டதாக கூறி உங்கள் மனைவிக்கு 2-வது திருமணம் செய்து நானும் அந்த திருமணத்திற்கு சென்று வந்தேனே என்று குமாரிடம் அவர் கூறியுள்ளார். அதை கேட்டதும் குமார் அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து பேட்டை போலீஸ் நிலையத்தில் குமார் புகார் செய்தார். அந்த புகாரில், தான் உயிரோடு இருக்கும்போதே தான் இறந்து விட்டதாக கூறி தனது மனைவி 2-வது திருமணம் செய்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

lady marry secondly without informing his husband in tirunelveli

அடுத்த செய்தி