ஆப்நகரம்

ரூ.10 ஆயிரம் கடனுக்காக 3 சென்ட் நிலத்தை கேட்கும் அதிமுக பிரமுகர் - கலெக்டரிடம் பெண் புகார்

பொதுமக்கள் குறை கேட்பு கூட்டத்தில் புகார் அளிக்க வந்த ஒரு பெண் தன் மகள் மற்றும் மகனை அழைத்து வந்திருந்தார். அவர் கையில் வைத்திருந்த பையை காவலர்கள் சோதனை செய்ததில் அதில் மண்எண்ணெய் இருந்தது.

Samayam Tamil 13 Mar 2018, 12:42 pm
கடலூர் : பொதுமக்கள் குறை கேட்பு கூட்டத்தில் புகார் அளிக்க வந்த ஒரு பெண் தன் மகள் மற்றும் மகனை அழைத்து வந்திருந்தார். அவர் கையில் வைத்திருந்த பையை காவலர்கள் சோதனை செய்ததில் அதில் மண்எண்ணெய் இருந்தது.
Samayam Tamil land acquisition by admk local leader women complaints to collector
ரூ.10 ஆயிரம் கடனுக்காக 3 சென்ட் நிலத்தை கேட்கும் அதிமுக பிரமுகர் - கலெக்டரிடம் பெண் புகார்


இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரித்ததில், தன் கணவர் செல்வம் குடிப்பழக்கத்தால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்னர் அதிமுக பிரமுகர் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியிருக்கிறார். அவர் இறந்த செய்தியை அறிந்த அவர், தன் கடன் தொகையை உடனே முழுவதுமாக செலுத்து, இல்லையெனில் வெத்து பேப்பரில் கையெழுத்து போட்டுக் கொடு அப்போது தான் உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் என சொன்னார். வேறு வழியில்லாமல் நானும் கையெழுத்து போட்டேன்.

இந்நிலையில் நான் கூலி வேலைக்கு சென்று என் பிள்ளைகளை படிக்க வைத்து வருகின்றேன். என் தந்தை எனக்கு கொடுத்த 3 1/4 சென்டு நிலத்தை தன் பெயருக்கு எழுதி கொடு என அதிமுக பிரமுகர் மிரட்டி வருகின்றார்.

என் கணவர் எவ்வளவு பணம் வாங்கினார், எவ்வளவு தரவேண்டும் என கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார். என்னிடம் உள்ள ஒரே சொத்து அந்த நிலம் அதையும் அவர் அபகரிக்கப் பார்க்கின்றார். பிறகு என் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். எனவே வேறு வழியின்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக குழந்தைகளை அழைத்துக்கொண்டு மண்எண்ணெய் கேனுடன் வந்தேன். என கூறினார்.

இதையடுத்து கலெக்டரை பார்க்க அனுமதித்த போது, காவல்துறை உரிய விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார்.

அடுத்த செய்தி