ஆப்நகரம்

மின்னல் தாக்கி பலியான 21 ஆடுகள்; வேதனையில் துடிக்கும் விவசாயி!

மின்னல் தாக்கி ஆடுகள் மற்றும் மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 13 Oct 2017, 2:04 am
நெல்லை: மின்னல் தாக்கி ஆடுகள் மற்றும் மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil lightning killed 21 goats in tirunelveli
மின்னல் தாக்கி பலியான 21 ஆடுகள்; வேதனையில் துடிக்கும் விவசாயி!


நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் அம்பாசமுத்திரம், கடையம், முக்கூடல், திசையன்விளை, திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்கிறது.

தொடர்மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் நாங்குநேரி அடுத்த அம்பூரணி சாத்தான்குளம் கிராமத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

அதில் தளவாய்(70) என்ற விவசாயி வைத்திருந்த ஆட்டு மந்தையில் மின்னல் தாக்கியது. அதில் 21 ஆடுகள் பலியாகின. இதைக் கண்ட தளவாய் மிகுந்த அதிர்ச்சியடைந்தார். கண்ணீருடன் இருந்த அவரை, அப்பகுதி மக்கள் ஆற்றுப்படுத்தினர்.

இதேபோல் திருவேங்கடம், சிவந்திபட்டி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 2 பசு மாடுகள் உயிரிழந்தன. இதனால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

Lightning killed 21 goats in Tirunelveli.

அடுத்த செய்தி