ஆப்நகரம்

ராஜஸ்தானில் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் மதுபானம்..!

ராஜஸ்தானில் சிறுவர்களை வைத்து வீட்டுற்கே மதுபானத்தை டெலிவரி செய்ய வைக்கும் கொடுமை நடந்து வருகிறது.

TNN 28 May 2017, 9:19 am
ராஜஸ்தானில் சிறுவர்களை வைத்து வீட்டுற்கே மதுபானத்தை டெலிவரி செய்ய வைக்கும் கொடுமை நடந்து வருகிறது.
Samayam Tamil liquor door delivered in rajasthan by school students
ராஜஸ்தானில் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் மதுபானம்..!


ராஜஸ்தான் மாநிலம் பீகானீர் மாவட்டத்தில் மதுக்கடைகள் இல்லாத பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களின் வீட்டிற்கே சென்று மது சப்ளை செய்வதற்காக கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் சிறுவர்களை, அந்த மாவட்ட மதுக்கடை உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால் மாணவர்களுக்கு ராஜஸ்தான் அரசு சார்பில் அளிக்கப்பட்ட மிதிவண்டிகளை வைத்துதான், இந்த டோர் டெலிவரி வேலைகள் நடைபெற்று வருகின்றன. விடுமுறை நாளில் சம்பளம் கிடைக்கிறதே என மாணவர்களும் இதிலுள்ள ஆபத்து தெரியாமல் மது பானத்தை டோர் டெலிவரி செய்யும் வேலையில் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த கொடுமை குறித்து உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியும், ராஜஸ்தான் அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.

Liquor door delivered in Rajasthan by school students

அடுத்த செய்தி