ஆப்நகரம்

காதல் திருமணம் செய்ததால் வங்கி ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கம்..!

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை வேலையிலிருந்து நீக்கியுள்ளது பெங்களூருவில் செயல்பட்டு வரும் வங்கி.

TNN 26 Jun 2016, 2:07 pm
காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை வேலையிலிருந்து நீக்கியுள்ளது பெங்களூருவில் செயல்பட்டு வரும் வங்கி.
Samayam Tamil love couple expelled from their job in the name of castism
காதல் திருமணம் செய்ததால் வங்கி ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கம்..!


பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஹோட்டல் இண்டஸ்ரியலிஸ்ட் கோ-ஆப்ரேடிவ் வங்கியில் ஊழியர்களாக பணியாற்றி வந்த ராகேஷ் மற்றும் உன்னாதி ஆகியோர் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால்,உன்னாதி வீட்டில் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மேலும் உன்னாதியின் வீட்டில் அவசரமாக அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி வேலைக்கு திரும்பிய இருவரையும், வங்கி நிர்வாகம் வேலை செய்ய அனுமதிக்கவில்லை.ஜாதி மாற்றி திருமணம் செய்து கொண்டதால் வங்கியின் மரியாதை குறைந்துவிட்டதாக கூறி இருவரையும் வேலையை விட்டு நீக்கியுள்ளனர்.இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பத்திரிக்கைகளில் செய்தி வெளியானதை தொடர்ந்து,ஏழு மாதங்களுக்கு பிறகு வேலை நீக்கம் குறித்து விவாதிப்பதற்காக இருவருக்கு வங்கி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

அடுத்த செய்தி