ஆப்நகரம்

காதலுக்கு எதிர்ப்பு விஷம் குடித்து காதலர்கள் தற்கொலை

பெற்றோரின் எதிர்ப்பால் காதல் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

TNN 27 May 2017, 3:05 pm
விருதுநகர் : பெற்றோரின் எதிர்ப்பால் காதல் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
Samayam Tamil love failure lovers suicide in srivilliputhur
காதலுக்கு எதிர்ப்பு விஷம் குடித்து காதலர்கள் தற்கொலை


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி, நெடுங்குளம், ஈஸ்வரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலு. இவர் மகன் விஜயகுமார் (21), அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் அபிராமி சுந்தரியை (21) காதலித்து வந்தார்.

விஜயகுமார் கிருஷ்ணன் கோவிலில் உள்ள தனியார் ஐடிஐயில் மெக்கானிக்கல் படிப்பை முடித்துள்ளார். அபிராமி சுந்தரி, விஜயகுமார் படித்த கல்லூரி வளாகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் அபிராமி சுந்தரியின் பெற்றோருக்கு தெரியவரவே, கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடிகள் பூச்சிக் கொள்ளி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி