ஆப்நகரம்

டீ விற்று பிரதமராகலாம்; குடியரசுத் தலைவர் ஆக கூடாதா? 4வது முறையாக களமிறங்கும் டீ வியாபாரி...!

டீ விற்கும் வியாபாரி ஒருவர், 4வது முறையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்க தயாராகி வருகிறார்.

TNN 18 Jun 2017, 12:36 pm
போபால்: டீ விற்கும் வியாபாரி ஒருவர், 4வது முறையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்க தயாராகி வருகிறார்.
Samayam Tamil madhya pradesh chaiwallah in presidential poll fray for 4th time
டீ விற்று பிரதமராகலாம்; குடியரசுத் தலைவர் ஆக கூடாதா? 4வது முறையாக களமிறங்கும் டீ வியாபாரி...!


டீ விற்ற நபர் பிரதமராக மாறலாம். ஆனால் குடியரசுத் தலைவராக மாறக் கூடாதா? மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்தவர் ஆனந்த் சிங் குஷ்வாஹா(49). டீ விற்கும் நபரான அவர், எப்படியாவது தேர்தலில் நின்று வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த 1994ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு தேர்தல்களில் நின்று வருகிறார். அதில் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலும் அடங்கும்.

ஆனால் தொடர்ந்து 20 முறையும் தோற்றுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் உடன் சிறந்த நட்பை பேணி வருவதாக கூறியுள்ளார். இதுவரை தனக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்றும், ஆனால் இந்த முறை நிச்சயம் மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும் என்று ஆனந்த் சிங் தெரிவித்துள்ளார். தேர்தலில் நிற்பதற்கான டெபாசிட் தொகையை, நாள்தோறும் டீ விற்று பெறும் தொகையில் இருந்து சேமித்து வருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல் 376 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரசாரத்தின் போது, தனது சைக்கிளில் தான் சென்று வருகிறார். அந்த சமயங்களில் அவருடைய மனைவி டீ வியாபாரத்தை கவனிக்கிறார். கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, அவரிடம் ரூ.5000 ரொக்கமும், ரூ.10,000 மதிப்புள்ள அசையா சொத்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் 4வது முறையாக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

A Gwalior-based chaiwallah remembers every election he has fought since 1994, including for the post of vice-president.

அடுத்த செய்தி