ஆப்நகரம்

ஆற்றோரமாக மலம் கழிக்க சென்ற மணமகனின் ஆணுறுப்பு துண்டிப்பு!

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் இன்னும் சில நாட்களில் திருமணமாக உள்ள இளைஞரின் ஆணுறுப்பை மர்மநபர்கள் வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 2 Feb 2018, 5:22 pm
போபால்: மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் இன்னும் சில நாட்களில் திருமணமாக உள்ள இளைஞரின் ஆணுறுப்பை மர்மநபர்கள் வெட்டி எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil madhya pradesh man bobbitised days before wedding
ஆற்றோரமாக மலம் கழிக்க சென்ற மணமகனின் ஆணுறுப்பு துண்டிப்பு!


போபாலைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருக்கு, பிப்ரவரி 6 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது வீட்டிலிருந்த அந்த இளைஞர், மலம் கழிப்பதற்காக அங்கிருந்த ஆற்றுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அவரை அடையாளம் தெரியாத இரண்டு மர்மநபர்கள் தாக்கியுள்ளனர். பின்னர், அவரின் ஆணுறுப்பை வெட்டி, அதை தங்களோடே எடுத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை யார் செய்தது எனவும், அதற்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே, துண்டிக்கப்பட்ட உறுப்பை எடுத்துச் சென்றுவிட்டதால், ஆணுறுப்பை மீண்டும் சேர்த்து அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி