ஆப்நகரம்

டெபிட் கார்டு பின்னால் ’பின்’ நம்பரை எழுதி வைத்ததால் விபரீதம்; இவ்வளவு பணம் போச்சே!

புனே: பின் நம்பரை டெபிட் கார்டில் எழுதி வைத்ததால், வங்கிக் கணக்கில் இருந்த பணம் மாயமானது.

TIMESOFINDIA.COM 22 Nov 2018, 11:48 am
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டம் சிக்ஹாலி பகுதியைச் சேர்ந்தவர் வடிலே. இவர் கடந்த ஞாயிறு அன்று இரவு, தனது குடும்பத்தாருடன் வீட்டு மொட்டை மாடியில் படுத்து உறங்கியுள்ளார். இது கொள்ளையர்களுக்கு மிகவும் வசதியாகிப் போனது.
Samayam Tamil Debit Card Fraud


அன்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.13,000 மதிப்பிலான பணம், நகை மற்றும் செல்போன்கள், டெபிட் கார்டுகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து டெபிட் கார்டின் பின்புறம் பின் நம்பர் எழுதி இருந்தது.

அதைக் கொண்டு அருகிலிருந்த ஏடிஎம்மிற்கு சென்று ரூ.47,000 பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். அடுத்த நாள் காலை விழித்த போது தான், வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தெரியவந்துள்ளது.

உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மேலும் தனது செல்போனில் ரூ.47,000 பணம் எடுத்ததற்கான எஸ்.எம்.எஸ் வந்திருந்தது கண்டு அதிர்ந்தார். இதுகுறித்தும் போலீசாரிடம் வடிலே புகார் அளித்துள்ளார்.

மொத்தம் வடிலேவிடம் இருந்து ரூ.60,000 திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஏடிஎம் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி