ஆப்நகரம்

மணல் தட்டுப்பாட்டால் மண்ணிலும் கலப்படம்! மக்கள் அவதி

மலேசியாவில் இருந்து தரமில்லாத மண்ணை தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்டு, கலப்பட மணலாக விற்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

Samayam Tamil 1 Apr 2018, 5:08 pm
மலேசியாவில் இருந்து தரமில்லாத மண்ணை தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்டு, கலப்பட மணலாக விற்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
Samayam Tamil malysia sand



தமிழகத்தில் ஆண்டு முழுவதும் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தாலும், கோடை காலத்தில் தான் அதிகமாக நடக்கின்றன. கோடை காலத்தின் போது நீர் நிலைகள் வறண்டு போவதால், ஆற்று மணலை அள்ளி, அதை கட்டுமான பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மலேசியாவில் இருந்து தரமற்ற மணலை தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்து, அதை நமது மணலுடன் கலந்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சென்னையில் ஒருவர் மணலை வாங்க கடைக்குச் சென்றிருந்த போது, “தூத்துக்குடி மணல் தான், நல்ல மணல்” என்று கூறி குருணை போன்ற மணலை கொடுத்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அந்த வாடிக்கையாளர், ரசீதை வாங்கி பார்த்ததில், கடை பெயர், முகவரி, மொபைல் நம்பர் என எதுவும் இல்லாமல் இருந்தது.

இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தரம் குறைவாக இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், எனவே, மலேசிய மணல் என்று கூறி யாரும் விற்பனை செய்தால் அவற்றை வாங்க வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.

மேலும், மணலில் சந்தேகம் இருந்தால், மண் பரிசோதனை நிலையத்தில் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், கடையின் பெயர், முகவரியோடு கூடிய ரசீது இருந்தால் மட்டுமே, கலப்படம் இருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், ஒரு டம்ளர் நீரில் மணலை போட வேண்டும் என்றும், அது கடற்கரை மணலாக இருந்தால், தண்ணீரில் உப்பு கரையும், அந்த நீரை சுவைத்துப் பார்த்து உப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி