ஆப்நகரம்

பெற்ற மகளை பல நாட்களாக பாலியல் கொடுமை செய்து வந்த காமுகன் தந்தை கைது!

தனது 25 வயது மகளை பல நாட்களாக பாலியல் கொடுமை செய்து வந்த காமவெறி பிடித்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

TNN 8 Jun 2017, 3:07 pm
பெங்களூரு : தனது 25 வயது மகளை பல நாட்களாக பாலியல் கொடுமை செய்து வந்த காமவெறி பிடித்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil man arrested for raping daughter priest detained
பெற்ற மகளை பல நாட்களாக பாலியல் கொடுமை செய்து வந்த காமுகன் தந்தை கைது!


ராஜகோபால் நகர் வடக்கு பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் (48) என்பவர் தனது 25 வயது மகளை பல நாட்களாக பாலியல் செய்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மகதி, அஜ்ஜன்ஹள்ளியை சேர்ந்த ரமேஷ் குமார் தனது மகளை நீண்ட நாட்களாக தனது மனைவி வீட்டில் இல்லாத போது பாலியல் கொடுமை செய்து வந்துள்ளார். பெரும் துன்பத்தை அனுபவித்து வந்த அப்பெண் தன் தாயிடம் இது குறித்து கூறியிருக்கிறார்.

ஆனால் இதனை மறுத்த ரமேஷ், மல்லேஷ் எனும் பூசாரியை அழைத்து மகளின் கன்னித்தன்மையை நிரூபிப்பதாக தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ரமேஷின் வீட்டிற்கு வந்த பூசாரி மல்லேஷ் ஆணிகள் பதிக்கப்பட்ட சந்தனக்கட்டையை தன்னுடன் எடுத்து வந்துள்ளார். ரமேஷின் மகளை அந்த கட்டையின் மீது ஏறி நிற்கும் படி கூறியிருக்கிறார். ஏறி நிற்கும் போது ரத்தம் வந்ததை அடு்த்து மல்லேஷ், ரமேஷின் மனைவியிடம் அவரது மகள் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்று கூறியுள்ளார்.

சந்தேகம் கொண்ட அப்பெண்ணின் தாய் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து ரமேஷிடம் காவலர்கள் விசாரணை நடத்தியதில் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ரமேஷின் செயல் குறித்து பூசாரி மல்லேஷிற்கு தெரியுமா அல்லது தெரியாதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். தெரியும் பட்சத்தில் ஒரே வழக்கின் கீழும், தெரியவில்லை என்றால் வேறு வழக்கும் பதியப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இது குறித்து மல்லேஷிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இரு தினங்களில் உண்மை என்னவென்று தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது கன்னித்தன்மை சோதனை குறித்து சொல்ல ரமேஷிடம் பணம் வாங்கியதை மல்லேஷ் ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி