ஆப்நகரம்

மகளை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூர தந்தை கைது

மகாராஷ்டிரா மாநிலத்தில் சொந்த மகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டார்.

TOI Contributor 20 Jun 2016, 6:27 pm
மகாராஷ்டிரா மாநிலத்தில் சொந்த மகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil man arrested for repeatedly raping minor daughter in maharashtra
மகளை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூர தந்தை கைது


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது பிவண்டி. இங்கு தறியில் வேலை செய்து வரும் 45 வயது தந்தை ஒருவர் கடந்த ஆறு மாதங்களாக தனது 11 வயது சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்தாண்டு நவராத்திரியில் இருந்து நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் வரை இந்தக் கொடுமை அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. இந்தக் கொடுமையை தாங்க முடியாமல், தாயிடம் அந்தப் பெண் கூறி அழுதுள்ளார். இதையடுத்து தந்தை தப்பி ஓடிவிட்டார்.

வீட்டுக்கு திரும்பி வரவே, பிவண்டியில் சாந்தி நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் கணவன் மீது மனைவி புகார் அளித்தார். இதையடுத்து, கடந்த வெள்ளிகிழமை அந்தப் பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

இவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்தப் பெண்ணின் தாய்.

அடுத்த செய்தி