ஆப்நகரம்

ஒரு தப்பும் செய்யாத அப்பாவிகளை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கொலை செய்த மக்கள்!

ஒரு தப்பும் செய்யாத அப்பாவிகளை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கொலை செய்த மக்கள்!

TOI Contributor 22 May 2017, 5:57 am
எந்த தவறும் செய்யாத அப்பாவி இளைஞர்களை கிராம மக்கள் சேர்த்து அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil man begging for life capture brutality of jharkhand lynching
ஒரு தப்பும் செய்யாத அப்பாவிகளை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கொலை செய்த மக்கள்!


ஜாம்ஷெட்பூர் அருகில் உள்ள சோபர்பூர் எனும் மலைவாழ்மக்கள் வசிக்கும் பகுதியில் குழந்தைகள் கடத்தப்படுவதாக செய்தி பரவியுள்ளது. குழந்தையை திருடுபவர்கள் அப்பகுதியில் அதிகம் உலவுவதாகவும், அதனால் எச்சரிக்கையாக இருக்கும்படியும் வாட்ஸ் அப் செய்தி வதந்தியாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் முகமது நயீம் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் வேலை நிமித்தமாக சோபர்பூர் வழியாக சென்ற போது, சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை பிடித்த கிராம மக்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.

கொலை வெறி தாக்குதலில் நயீம் உட்பட அனைவரும் உயிரிழந்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நயீம் பொதுமக்களிடம் அடிக்க வேண்டாம் என்று கையெடுத்து கும்பிடும் போட்டோ ஒன்று வெளியாகி அனைவரையும் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த போது நயீம் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இணையத்தில் வைரலாகி வரும் இந்த கொடூர சம்பவம் எல்லோர் தரப்பிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி