ஆப்நகரம்

வாய்க்குள் புகுந்த பாம்பை கடுப்பில் கடித்து குதறிய நபர்

உறங்கிக் கொண்டிருந்த நபரின் வாய்க்குள் புகுந்த பாம்பை கடித்து இரு துண்டாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 9 Sep 2016, 3:15 pm
இந்தோர்: ​ உறங்கிக் கொண்டிருந்த நபரின் வாய்க்குள் புகுந்த பாம்பை கடித்து இரு துண்டாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil man bites off snakes head after it slithers into mouth
வாய்க்குள் புகுந்த பாம்பை கடுப்பில் கடித்து குதறிய நபர்


தூக்கத்தை மிகவும் நேசிக்கும் வினோத் ரகுவான்ஷி(28), கடந்த வியாழக்கிழமையன்று உறங்கிக் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக அவரது வாய்க்குள் நுழைந்த பாம்பின் தலையை கடித்து குதறியுள்ளார். வினோத்தின் அறைக்கு வந்த அவரது தாயார் வினோத்தின் வாயில் ரத்தம் வழிந்தோடுவதைக் கண்டு அவரை எழுப்பியபோது தான் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த பாம்பின் மறுப்பகுதி தரையில் துள்ளிக் கொண்டிருந்ததையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரகுவான்ஷிக்கு விஷம் ஏறாமல் தடுக்கும் ஊசி போடப்பட்டது. இதேபோன்று சில மாதங்களுக்கு முன்னதாக ஜார்கண்ட் மாநிலத்தில் காட்டுவாசி கட்டுவிரியனை கடித்து கொன்றுவிட்டு, அடுத்த 12 மணி நேரத்தில் அவரும் உயிரிழந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்னதாக நேபாளில் நடந்த இதுபோன்ற சம்பவத்தில் பாம்பை கடித்தவர் உயிரிழக்கவில்லை.

பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் வினோத் பணி முடிந்து வீடு திரும்பியதும் அசதியில் வாயை பிளந்துகொண்டு தூங்குவது வழக்கம். ஆழ்ந்த தூக்கத்தின்போது வினோத்தின் வாய்க்குள் புகுந்த பாம்பின் தலையை கடித்து மென்று விழுங்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வினோத்தின் தாயார் பீர் பாபாவிடம் அழைத்துச்சென்றுள்ளார். பீர் பாபா கொடுத்த மருந்து சாப்பிட்டதில் பாம்பின் தலையை வினோத் வாந்தி எடுத்துவிட்டார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வினோத்தின் கதையைக் கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தற்போது மருத்துவமனையில் வினோத் சிகிச்சை பெற்று வருகிறார்.

அடுத்த செய்தி