ஆப்நகரம்

கிரிக்கெட் விளையாடும்போது மயங்கி விழுந்து உயிரிழந்த இளைஞர்!!

ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், கிரிக்கெட் வீரர் மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது

Samayam Tamil 27 Jan 2018, 5:02 pm
ஹைதராபாத்: ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், கிரிக்கெட் வீரர் மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Samayam Tamil man dies while playing cricket in hyderabad
கிரிக்கெட் விளையாடும்போது மயங்கி விழுந்து உயிரிழந்த இளைஞர்!!


ஹைதராபாத்தைச் சேர்ந்த லாயிட் அந்தோணி (வயது 23) என்ற வாலிபர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது, தனது அணிக்காக பந்துவீசும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, அவரை சக வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அந்தோணி பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின், மருத்துவமனையில் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவர் பந்துவீசும்போது மயங்கி விழந்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி