ஆப்நகரம்

ரயிலுடன் செல்ஃபி எடுத்து அதை பார்க்க கொடுத்து வைக்காத 4 இளைஞர்கள்

மேற்கு வங்கத்தில் ஓடும் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரை பறிகொடுத்துள்ளனர்.

TNN 14 Apr 2017, 2:13 pm
மேற்கு வங்கத்தில் ஓடும் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரை பறிகொடுத்துள்ளனர்.
Samayam Tamil man falls off train for dramatic selfie 4 friends die trying to save him
ரயிலுடன் செல்ஃபி எடுத்து அதை பார்க்க கொடுத்து வைக்காத 4 இளைஞர்கள்


மேற்கு வங்கத்தில், ஹவுராவுக்கு அருகே ரயிலில் சென்று கொண்டிருந்த 4 இளைஞர்கள், ரயிலின் வெளியே தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அதில் செல்ஃபி எடுத்த தரகந்த் மகல் என்பவர் கால் தவறி ரயிலிலிருந்து வெளியே விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மற்ற நண்பர்களும் வெளியே தவ்வினர்.

அப்போது எதிர்பாராத விதமாக எதிரே ஒரு ரயில் வர அதில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். மேலும் ஒருவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் லிலுவா மற்றும் பெலூர் ஸ்டேஷன்களுக்கு இடையே நடந்துள்ளது. வெளிச்சம் மிகவும் குறைவாக இருந்ததால் எதிரே ரயில் வருவது தெரியாமல் நண்பனை காப்பாற்ற ரயிலிலிருந்து குதித்ததாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி