ஆப்நகரம்

”கடன் தொல்லை காரணமாக தற்கொலை”:தூக்கிடுவதை வீடியோ எடுத்த கொடுமை..!

கடன் தொல்லை தாங்க முடியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மட்டுமல்லாது,தனது மரண வாக்குமூலத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

TNN 23 Feb 2017, 6:13 pm
கடன் தொல்லை தாங்க முடியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மட்டுமல்லாது,தனது மரண வாக்குமூலத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
Samayam Tamil man hanged himself after shoot a video in his mobile
”கடன் தொல்லை காரணமாக தற்கொலை”:தூக்கிடுவதை வீடியோ எடுத்த கொடுமை..!


கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரனோஜி ராவ் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்னர்,வழக்கறிஞர் தம்பதிகளிடம் 4.25 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.அவற்றில் 2.28 லட்சம் ரூபாயை திரும்பச் செலுத்தியுள்ளார்.ஆனால் அவர்கள் வட்டியுடன் சேர்த்து 20 லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என ரனோஜி ராவை வற்புறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று தனது இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிய ரனோஜி ராவ்,கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி தனது மரண வாக்குமூலத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.பின்னர் தனது வீட்டில் அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

”என் பிள்ளைகள் மேல் சத்தியம்.நான் இன்றைக்கு இறந்ததும்,என் பிள்ளைகள் அனாதைகள் ஆகிவிடுவார்கள்.எனவே அவர்களை யாரும் கொடுமைப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.அவர்களுடைய கடனை அடைக்க நான் தயாராக இருக்கிறேன்.ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு.”என அந்த வீடியோவில் ரனோஜி தெரிவித்துள்ளார்.

ரனோஜியின் தற்கொலையை தொடர்ந்து,கடன் தொல்லை கொடுத்த வக்கீல் தம்பதிகளின் மேல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Man Hanged himself after shoot a video in his Mobile

அடுத்த செய்தி