ஆப்நகரம்

பட்டப்பகலில்,நடுரோட்டில் தூக்கு மாட்டி தற்கொலை..!

மும்பையின் பரபரப்பான சாலையின் நடைபாதையில் உள்ள மரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

TNN 1 Sep 2016, 2:21 am
மும்பையின் பரபரப்பான சாலையின் நடைபாதையில் உள்ள மரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Samayam Tamil man hangs himself to death in broad daylight
பட்டப்பகலில்,நடுரோட்டில் தூக்கு மாட்டி தற்கொலை..!


மும்பையில் உள்ள ஏர் இந்தியா பில்டிங் சந்திப்பானது ,எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும்.தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் இந்த சாலையில்,மரைன் டிரைவ் பகுதிக்கு எதிரில் உள்ள நடைபாதை மரத்தில் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும்,ஆனால் அந்த பகுதியை கடந்து செல்லும் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை எனவும் நேற்று மதியம் ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்,தூக்கில் தொங்கிய உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை செய்து கொண்டுள்ள நபர்,சாலையோரம் வசிக்கும் மக்களில் ஒருவராக இருக்கக் கூடும் எனவும் தற்போது வரை தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்த தகவல் தெரியவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு சில அடி தூரத்தில்தான் சிலர் சாலையை தோண்டி,வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.தூக்கில் ஒரு மனிதன் தற்கொலை செய்து கொண்டது கூட தெரியாமல்,தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர்களின் மனித நேயத்தை என்னவென்று சொல்வது?

அடுத்த செய்தி