ஆப்நகரம்

பெற்ற மகளை பாலியல் கொடுமை செய்த கொடூர தந்தை!

பெற்ற மகளை பாலியல் கொடுமை செய்த கொடூர தந்தை!

TNN 6 Apr 2017, 11:58 pm
திருச்சி : தன் 11 வயது மகளை பாலியல் கொடுமை செய்த 46 வயது தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil man held for raping daughter in trichy
பெற்ற மகளை பாலியல் கொடுமை செய்த கொடூர தந்தை!


11 வயது சிறுமி ஒருவர் கடந்த இரண்டு வாரமாக தன் தந்தையால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். தொல்லை தாங்காமல் ஒருகட்டத்தில் பொறுமையிழந்த சிறுமி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார். பக்கத்தில் உள்ளவர்கள் குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். குழந்தைகள் நல மையத்தில் இருந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த அதிகாரிகள், சிறுமியை மீட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடு்த்தனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு அதிகமாக குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. தினக்கூலி வேலை செய்துவரும் இவருக்கு இரண்டு மகள்களும், இரண்டு மகனும் உள்ளனர். தொடர்ந்து குடித்து வந்ததால், இரண்டு வருடங்களுக்கு இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். பாலியல் வன்கொடுமை குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள காவல்துறை, அவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி