ஆப்நகரம்

வாய்தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்

டெல்லி அருகே வாய்தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

TNN 26 Oct 2016, 4:55 pm
டெல்லி : டெல்லி அருகே வாய்தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil man killed his wife near delhi
வாய்தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்


தெற்கு டெல்லி அருகே ஆனந்த் நிகேதன் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் மோகா (60). இவருக்கு மஞ்சு மோகா (58) என்ற மனைவி உள்ளார்.இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இன்று காலையில் தனது மனைவியை முகேஷ் அலுவலகத்திற்கு விட சென்றுள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முககேஷ் தனது மனைவி மஞ்சுவை இருமுறை கத்தியால் குத்தினார்.

இதில் பலத்த காயமடைத்த மஞ்சு சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் மூகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி