ஆப்நகரம்

சப்பாத்தி ரவுண்டா வரலையாம்; கர்ப்பிணி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்...!

சப்பாத்தி சரியாக வரவில்லை என்று கூறி, கர்ப்பிணி மனைவியை கணவன் கொடூரமாக கொன்றுள்ளார்.

TNN 24 Jul 2017, 9:42 am
டெல்லி: சப்பாத்தி சரியாக வரவில்லை என்று கூறி, கர்ப்பிணி மனைவியை கணவன் கொடூரமாக கொன்றுள்ளார்.
Samayam Tamil man kills wife as her chappatis not round
சப்பாத்தி ரவுண்டா வரலையாம்; கர்ப்பிணி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்...!


டெல்லியின் வடமேற்கே உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியைச் சேர்ந்தவர் சிம்ரன்(22). 4 மாத கர்ப்பிணியான இவர், தனது கணவர் மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில், சிம்ரனின் சகோதரர் சுயநினைவின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவருடைய மகள் ஒரு அறையில் பூட்டப்பட்டு கிடந்துள்ளார்.

உடனடியாக சிம்ரனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். அவருடைய கணவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் சப்பாத்தி வட்டமாக வரவில்லை என்று தந்தை தாயிடம் சண்டையிட்டதாக அவர்களது மகள் கூறியுள்ளார்.

இரவு 10.30 மணியளவில் இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டதாகவும், அப்போது தாயின் வயிற்றில் உதைத்தாகவும் தெரிவித்தார். அவரை தடுக்கச் சென்ற தன்னை அறையில் வைத்து பூட்டி விட்டதாகவும் குறிப்பிட்டார். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. தன்னுடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், 2 ஆண்டுகளாக தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

Man kills wife as her chappatis not round.

அடுத்த செய்தி