ஆப்நகரம்

வைரல் வீடியோ : நடுரோட்டில் கருணையின்றி கொடூரமாக தாக்கப்படும் நபர்!

வைரல் வீடியோ : நடுரோட்டில் கருணையின்றி கொடூரமாக தாக்கப்படும் நபர்!

TOI Contributor 4 Apr 2017, 5:01 pm
குஜராத் : காந்திநகரில் நடுரோட்டில் 6 பேர் சேர்ந்து ஒருவரை கொடூரமாக தாக்கப்படும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Samayam Tamil man mercilessly beaten up by in laws in gandhinagar
வைரல் வீடியோ : நடுரோட்டில் கருணையின்றி கொடூரமாக தாக்கப்படும் நபர்!


தாக்குதலுக்கு உள்ளான நபருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. அந்த தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர் தன் மனைவியை தாக்கி, சண்டை போட்டு வந்துள்ளதாக அவரது மனைவி கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு சண்டை வந்த போது, அந்த நபர் தன் மனைவியை தாக்கியதில் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் அப்பெண் ஒரு கண் பார்வையை இழந்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அப்பெண் தன் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த விஷயங்களை கூறவே, பெண்ணின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் நடுரோட்டில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சாலையின் நடுவே இரும்பு கம்பி மற்றும் தடியை கொண்டு கருணையின்றி கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அவரின் காரையும் அடித்து உடைத்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தின் மூலமாக பரவி தற்போது வைரலாகி வருகிறது. தன் மனைவியிடன் வரதட்சணை கேட்டு ரொம்ப நாட்கள் அவர் தொந்தரவு செய்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், மற்றவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். வழக்கு பதிவுசெய்துள்ள காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி