ஆப்நகரம்

மதுரை அருகே பிரிந்து சென்ற மனைவியை குத்தி கொன்ற முன்னாள் கணவன்!

மதுரை: பிரிந்து சென்ற மனைவியை, முன்னாள் கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TIMESOFINDIA.COM 16 Oct 2018, 8:20 pm
மதுரை மாவட்டம் அழகிரிபட்டியைச் சேர்ந்தவர் பிரபு(32). இவரது மனைவியாக ஜி.ரேணுகா இருந்துள்ளார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.
Samayam Tamil Murder


இதையடுத்து ரேணுகா அதே ஊரில் உள்ள தனது தாயின் வீட்டில் வசித்து வந்தார். இந்த சூழலில் ரேணுகாவை அடிக்கடி சந்தித்து, சமாதானம் செய்து தனது வீட்டிற்கு அழைத்து வர முயற்சித்து வந்துள்ளார்.

கடந்த திங்கள் அன்று இரவு ரேணுகா, தனது சகோதரியின் மகளுடன் மேலூர் - செக்கிபட்டி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பிரபு, திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து தன்னிடம் இருந்த கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு, ரேணுகாவை தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சூழலில் படுகாயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து ரேணுகாவின் சகோதரி அளித்த புகாரின் பேரில், கீழவளவு போலீசார் பிரபுவை கைது செய்தனர்.

Man murders estranged wife in TN.

அடுத்த செய்தி