ஆப்நகரம்

சிறுமியை பலாத்காரம் செய்த உறவினருக்கு 10 ஆண்டு சிறை

உறவுக்கார சிறுமியை தொடர்ந்து 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த நபருக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து குழந்தைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கும் பாலியல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 30 Mar 2017, 1:31 pm
மும்பை: உறவுக்கார சிறுமியை தொடர்ந்து 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த நபருக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து குழந்தைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கும் பாலியல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil man rapes minor cousin gets 10 year jail
சிறுமியை பலாத்காரம் செய்த உறவினருக்கு 10 ஆண்டு சிறை


சிறுமியின் பெற்றோர்கள் வெளிநாட்டில் வசிப்பதால்,இங்கு தாத்தா, பாட்டி, மாமாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு மாமா, தாத்தா, பாட்டி வெளியே சென்றிருந்தபோது உறவுக்காரரான அந்த நபர் முதன் முறையாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர், அதனை வீடியோ பதிவு எடுத்து வைத்து சிறுமியை மிரட்டியுள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் கடந்த 2012ஆம் ஆண்டில் சிறுமியுடன் தங்க ஆரம்பிக்கும் வரை தொடர்ந்ததாக சிறுமி கூறியுள்ளார்.

மேலும், குடிக்கு அடிமையான தனது தந்தையும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி சார்பாக அவரது தாத்தா உறவினர் மீதும், சிறுமியின் தந்தை மீதும் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

A special Protection of Children from Sexual Offences Act court on Wednesday sentenced a now 29-year-old man to 10 years for repeatedly raping his 12-year-old cousin over seven months in 2012. The accused was also fined Rs 2 lakh.

அடுத்த செய்தி