ஆப்நகரம்

குழந்தை வரம் வேண்டி, 7 மாத குழந்தையை நரபலி கொடுத்த கொடூரம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தை வரம் வேண்டி, மாந்திரீகவாதியின் உதவியுடன் 7 மாத குழந்தையை நரபலி கொடுத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

PTI 2 Jun 2017, 1:47 pm
ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தை வரம் வேண்டி, மாந்திரீகவாதியின் உதவியுடன் 7 மாத குழந்தையை நரபலி கொடுத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil man sacrifices seven month old baby
குழந்தை வரம் வேண்டி, 7 மாத குழந்தையை நரபலி கொடுத்த கொடூரம்!


இது தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த படோய் கலிந்தி மற்றும் மாந்திரீகவாதி கர்மு கலிந்தி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். பாம்பாட்டியான படோய் கலிந்திக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும், அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காததால், பச்சிளம் குழந்தையை நரபலி கொடுத்து இறைவனை குளிர்வித்தால் குழந்தை வரம் கிடைக்கும் என மாந்திரீகவாதி கூறியுள்ளார்.

அதன்படி, கடந்த மே 26ஆம் தேதி நள்ளிரவு, மாந்திரீகவாதியான கர்முவின் உறவினர் சுபாஷ் என்பவரிடம் இருந்து 7 மாத பெண் குழந்தையை படோய் கலிந்தி தத்தெடுத்தார். உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை ஆற்றங்கரையோரம் கொண்டு வந்து உயிரோடு புதைத்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து, கர்மு காணாமல்போனதை வைத்து, குழந்தை தத்தெடுக்கப்பட்டதில் அவருக்கும் பங்கு இருப்பதாக கருதிய காவல்துறையினர் படோய் கலிந்தி மற்றும் கர்முவை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் நரபலி கொடுத்ததை ஒப்புக் கொண்டனர்.

பச்சிளம் குழந்தையை புதைக்க பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றிய காவல்துறையினர், குழந்தையின் உடலை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

A man with the help of a tantrik allegedly sacrificed a seven-month-old baby to appease God, so that he and his wife could have a child in Jharkhand's Seraikela-Kharswan district, police said today.

அடுத்த செய்தி