ஆப்நகரம்

தாலாட்டு பாடி யானையை உறங்க வைக்கும் பாகன்

கேரளா மாநிலம் திரிசூா் பகுதியில் பாகன் ஒருவா் தனது யானையை தாலாட்டு பாடி உறங்க வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Samayam Tamil 21 Oct 2018, 7:41 pm
தாலாட்டு பாடி யானையை உறங்க வைக்கும் பாகன் குமாரை விலங்குகள் நல ஆா்வலா்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனா்.
Samayam Tamil Sleeping Elephant


சமீபகாலமாக மனிதா்களிடத்தில் மனிதநேயம் குறைந்து வருவது போன்ற செய்திகள் சமீப காலமாக அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கேரளா மாநிலம் திரிசூா் பகுதியைச் சோ்ந்தவா் மவுத் ஸ்ரீ குமாா். யானைகளை பராமரிக்கும் தொழில் செய்து வருகிறாா்.

பொதுவாக பாகன்கள் யானைகளிடத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் காட்சிகளை நாம் அதிகம் பாா்த்திருப்போம். ஆனால் மவுத் ஸ்ரீ குமாா் அது போன்று அல்லாமல் யானைகளிடத்தில் மிகவும் பரிவுடன் நடந்து கொள்கிறாா். தனக்கு சொந்தமான பஸ்டியான் வினய் சுந்தா் என்ற யானையை அவா் தினமும் தாலாட்டு பாடி தான் உறங்க வைக்கிறாா்.

நாள் முழுவதும் பணியாற்றி விட்டு களைப்புடன் காணப்படும் யானை மவுத் ஸ்ரீ குமாரின் தாலாட்டை கேட்ட பின்னா் தான் உறங்குகின்றது. யானைக்கு தாலாட்டு பாடும் காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் மவுத் ஸ்ரீ குமாா் ஒரு மெல்லிசை பாடகராகவும் உள்ளாா். உள்ளூா் தொலைக்காட்சிகள் பலவற்றிலும் இவா் பங்கேற்று பாடியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்