ஆப்நகரம்

திருமணம் செய்ய மறுப்பு; அக்கா மகளை கத்தியால் குத்திய மாமன்...!

திருமணம் செய்ய மறுத்ததால், அக்கா மகளை மாமன் கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

TNN 7 Aug 2017, 11:32 am
திருச்சி: திருமணம் செய்ய மறுத்ததால், அக்கா மகளை மாமன் கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil man stabs niece after she refuses to marry him
திருமணம் செய்ய மறுப்பு; அக்கா மகளை கத்தியால் குத்திய மாமன்...!


திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே உள்ள கருங்காடு பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலத்தின் மகள் யோகலட்சுமி(19). இவருடைய தாய் வழி மாமன் வீரப்பிள்ளை(26), பச்சூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இவருக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில், பல ஆண்டுகளாக வேலையின்றி வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் அக்கா மகள் யோகலட்சுமியை திருமணம் செய்து தருமாறு, அவர்களது குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் யோகலட்சுமி படித்து வருவதால், திருமணம் செய்ய இயலாது என்று கூறியுள்ளனர். ஆனால் வீரப்பிள்ளை தொடர்ந்து திருமணத்திற்கு வலியுறுத்தி வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் கோபமடைந்த வெங்கடாசலம், குடிகாரனுக்கு தனது மகளை திருமணம் செய்து தர முடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்து, நன்கு குடித்து விட்டு யோகலட்சுமி வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த கத்தியால் யோகலட்சுமியை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

இதையடுத்து படுகாயமடைந்த அவரை, மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீரப்பிள்ளையை தேடி வருகின்றனர்.

Man stabs niece after she refuses to marry him.

அடுத்த செய்தி