ஆப்நகரம்

மதம் மாறிய காதல்: வாலிபரை தாக்கிய அநாகரீக கும்பல்!!

ஜார்கண்ட் மாநிலத்தில் அடுத்த மதத்தை சேர்ந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை ஒரு கும்பல் காட்டுமிராண்டித்தனமாக அடித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 2 Aug 2017, 12:33 pm
ஜார்கண்ட் மாநிலத்தில் அடுத்த மதத்தை சேர்ந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை ஒரு கும்பல் காட்டுமிராண்டித்தனமாக அடித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil man stripped thrashed for being in love with woman of other religion
மதம் மாறிய காதல்: வாலிபரை தாக்கிய அநாகரீக கும்பல்!!


இந்த சம்பம் ஜார்கண்ட் மாநிலத்தில் போகொரா மாவட்டத்தில் உள்ள கத்தாரா என்ற இடத்தில் நேற்று நடந்துள்ளது, இங்குள்ள பிரக்யா சென்டரில் முகம்மது ஷாகிர் என்ற வாலிபர் ஒரு பெண்ணுடன் நின்று பேசிக் கொண்டு இருந்தார். அந்தப் பெண்ணை அந்த வாலிபர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த 12 பேர் கும்பல் ஷாகிரை அந்த சென்டரின் வெளியே தர தரவென இழுத்து வந்தது. பின்னர், உடலில் ஒட்டு துணியும் இல்லாமல், அந்த சென்டரை சுற்றி இழுத்து வந்தனர். பின்னர் சரமாரியாக அடித்து துன்புறுத்தினர். அங்கிருந்த காவல்துறையினரால் கூட இவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஒரு வழியாக காவல்துறையினர் ஷாகிரை காப்பாற்றி அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஷாகிருக்கு உள் காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த இடத்தில் பதட்டம் நிலவியதை அடுத்து பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அங்கிருப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
Man stripped, thrashed for being in love with woman of other religion

அடுத்த செய்தி