ஆப்நகரம்

மனநலம் பாதித்த தந்தையை கட்டி வைத்து உதைத்த மகன்; கண்டுகொள்ளாத போலீஸ்!

தந்தையை கட்டி வைத்து உதைத்த மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Apr 2018, 5:44 pm
லக்னோ: தந்தையை கட்டி வைத்து உதைத்த மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Beaten by Son
உத்தரப்பிரதேசம்


உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரைச் சேர்ந்த முதியவர் நுரூல் இஸ்மா. இவருக்கு மொனு மற்றும் ரஹிம் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நுரூலிற்கு நினைவாற்றல் பிரச்சனை இருக்கிறது. மேலும் சற்று மனநலம் பாதித்தவர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, தந்தையை மகன்கள் வீட்டை விட்டு விரட்டி அடித்து விட்டனர். இருப்பினும் நுரூல் தொடர்ந்து வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கள் அன்று, வீட்டிற்கு வந்த நுரூலை, மகன்கள் இருவரும் விரட்டிச் சென்றுள்ளனர். அப்போது மொனு மீது நுரூல் கல்லை எறிந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த மொனு, தந்தையை கயிற்றால் கட்டி உதைத்துள்ளார். பின்னர் அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார்.

வீடியோவை பார்க்க: தந்தை என்றும் பாராமல் அடித்து, உதைக்கும் மகன்!

இதைத் தடுத்த ரஹிம் மற்றும் உறவினர்களை திட்டி தள்ளி விட்டுள்ளார். இதனால் யாருமே உதவிக்கு வரவில்லை.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார், மகன்கள் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

பின்னர் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் வெளியே விட்டுவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man tied to tree, beaten by son in UP.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்