ஆப்நகரம்

வீட்டை விட்டு ஓடி வந்து பேருந்தில் காத்திருந்த சிறுமிகள்!

டீன் ஏஜ் சிறுமிகள் இருவர் வீட்டை விட்டு ஓடி வந்ததால் ஏற்பட்ட விபரீதங்கள் குறித்து இங்கே காணலாம்.

TIMESOFINDIA.COM 16 May 2019, 2:53 pm
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த இரு டீன் ஏஜ் சிறுமிகள், சில பிரச்னைகளால் வீட்டை விட்டு ஓடி வந்துள்ளனர். இவர்களுக்கு 17 மற்றும் 19 வயது ஆகிறது. இருவரும் பேருந்தில் ஏறி பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடலூரில் இருந்து சென்னைக்கு ஒரு நபர் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
Samayam Tamil Rape


அதே பேருந்தில் தான் இரு சிறுமிகளும் இருந்துள்ளனர். அவர்கள் பேசிக் கொண்டு வந்ததைக் கேட்ட அந்த நபர், இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்ததை அறிந்து கொண்டார். பின்னர் சிறுமிகளிடம் மெல்ல பேச்சுக் கொடுத்துள்ளார்.

அப்படியே நல்ல வேலை வாங்கித் தருகிறேன். என்னுடன் வாருங்கள் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளார். அந்த நபரின் வாக்குறுதிகளை சிறுமிகளும் நம்பியுள்ளனர். தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று இருவரையும் தங்க வைத்துள்ளார்.

அங்கு தனது நண்பர்களிடம் போனில் பேசுவதைக் கேட்ட சிறுமிகள், அந்த இடம் பாதுகாப்பானது அல்ல என்று முடிவு செய்தனர். இதையடுத்து தாங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டனர்.

எனவே தங்களை திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் விட்டு விடுமாறு கூறியுள்ளனர். இந்நிலையில் இருவரில் ஒருவரை பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு, மற்றொருவரை அருகிலுள்ள புதர் பகுதிக்கு அந்த நபர் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு பாலியல் தொந்தரவு அளிக்க தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து, கூச்சலிடவே பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர். அவர்கள் சிறுமியை மீட்டு, அந்த நபரை வளைத்து பிடித்தனர். பின்னர் இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சிறுமிகளின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டில் விட்டு ஓடி வந்தால், எப்படிப்பட்ட விபரீதங்கள் காத்திருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வே சிறந்த உதாரணமாக அமைந்துவிட்டது.

அடுத்த செய்தி