ஆப்நகரம்

6 வயது சிறுவனை கொன்று மாமிசத்தை தின்ற “சைக்கோ” கொலைகாரன் கைது!

6 வயது சிறுவனை கொன்று மாமிசத்தை தின்ற “சைக்கோ” கொலைகாரன் கைது!

TNN 25 Feb 2017, 9:03 pm
உத்தரபிரதேசம் : ஆறு வயது சிறுவனை கொலை செய்து, அவனது மாமிசத்தை தின்ற சைக்கோ கொலைகாரனை காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil man who allegedly killed ate 6 yr old boy to be tried under nsa
6 வயது சிறுவனை கொன்று மாமிசத்தை தின்ற “சைக்கோ” கொலைகாரன் கைது!


பிலிபிட் மாவட்டம் அமாரியா பகுதியை சேர்ந்த நசீம் மியான் எனும் நபர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று தெரியவந்துள்ளது. இவர் மோனிஸ் எனும் சிறுவனை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அதன் பின்னர் சிறுவனின் மாமிசத்தை தின்றதாகவும் உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நசீம், பிலிபிட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றவாளி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பதிவு செய்யும் படி நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் நிசீமை போலீஸ் காவலில் எடுத்து இவ்வளவு கொடுமையாக கொலை செய்ததன் காரணம் என்றும் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிறுவன் மோனிஸின் கொலை பேய்த்தனமான செயல் என்று மாவட்ட நீதிபதி மசூம் அலி சர்வார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொலை 2006ஆம் ஆண்டு நிதாரியில் குழந்தைகளை வரிசையாக கொலை செய்து அவர்களிம் மாமிசத்தை தின்ற சுரேந்தர் கோலியின் வழக்கை நினைவுப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு என்றும் நீதிபதி கூறியிருக்கிறார். இந்த கொடூர செயல் பொதுமக்களை உறைய செய்துள்ளதாகவும், அமாரியா பகுதியை சேர்ந்த மக்கள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று வீதிக்கு வந்து போராடி வருவதாகவும் நீதிபதி கூறியிருக்கிறார்.

குற்றவாளி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளதால் அதற்கு ஏற்ப விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் ராம் சுரேஷ் யாதவ் கூறியுள்ளார். பல விதிமுறைகள் இருப்பதாகவும், அதனால் முறையான விசாரணை மேற்கொள்ள சிறிது காலம் ஆகும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி