ஆப்நகரம்

கள்ளகாதலுக்காக விமானத்தை கடத்துவதாக மின்னஞ்சல் அனுப்பி மாட்டிக்கொண்ட நபர்

காதலியுடன் ஊர் சுத்த பணம் இல்லாததால், போலியான விமான டிக்கெட் தயாரித்ததோடு, விமானத்தை கடத்தப்போவதாக போலீஸாருக்கு தகவல் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

TOI Contributor 20 Apr 2017, 3:34 pm
ஐதராபாத் : காதலியுடன் ஊர் சுத்த பணம் இல்லாததால், போலியான விமான டிக்கெட் தயாரித்ததோடு, விமானத்தை கடத்தப்போவதாக போலீஸாருக்கு தகவல் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil man who sent flight hijack threat mail to mumbai police arrested in hyderabad
கள்ளகாதலுக்காக விமானத்தை கடத்துவதாக மின்னஞ்சல் அனுப்பி மாட்டிக்கொண்ட நபர்


கடந்த 16ம் தேதி 6பேர் கொண்ட நபர்கள் விமானத்தை கடத்தப்போவதாக மும்பை விமான நிலையத்துக்கு ஒருவர் அச்சுறுத்தல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பினார். இதையடுத்து மும்பை, சென்னை, பெங்களூரு விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த மின்னஞ்சல் அனுப்பிய அனுப்பிய நபரை மும்பை போலீஸார் ஐதராபாத்தில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் வம்சி கிருஷ்ணன் என்றும், அவர் போக்குவரத்து தொழிலதிபராக உள்ளார்.

போலீஸார் விசாரணை தகவல்:
வம்சி ஐதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் வம்சிக்கு சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது.

வம்சியின் காதலி வம்சியுடன் சேர்ந்து மும்பை, கோவா உல்லாச சுற்றுலா செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த சுற்றுலாவுக்கு போதிய பணமில்லாவிட்டாலும், காதலியின் விருப்பத்தை நிராகரிக்க முடியாத வம்சி, போலியான விமான டிக்கெட்டை தயார் செய்து காதலிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதோடு, அவரின் காதலி சென்னை - மும்பை பயணம் செய்ய இருந்த 16ம் தேதி, மும்பை விமான நிலையத்துக்கு, விமானம் கடத்தப்பட வாய்ப்புள்ளதாக மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தற்போது இந்த மின்னஞ்சல் முகவரியை எங்கிருந்து வந்துள்ளது என சைபர் கிரைம் போலீஸார் விசாரணையில் கண்டுபிடித்து, வம்சியை கைது செய்துள்ளனர்.
மக்கள் எவ்வளவோ பிரச்னைகளை கடந்து, வேலை, மருத்துவத்திற்காக, மேலும் பிற விஷயங்களுக்காக பயணம் மேற்கொள்ள விமானத்தை அனுகுகின்றனர். ஆனால் இப்படி தங்கள் கள்ளக்காதலுக்காக விமானத்தை கடத்துவதாக மிரட்டி, பயணிகளையும், அதிகாரிகளையும் பயமுறுத்தி மின்னஞ்சல் அனுப்புவது எப்படி பட்ட மனநிலை உள்ள மனிதர்கள் என்பது வியப்புக்குரிய விஷயமாக தான் உள்ளது.

Hyderabad cops arrested a 32-year-old businessman for sending a hijack threat email to Mumbai police on April 15. The accused sent the threat email so that his girlfriend would agree to postpone their proposed trip to Mumbai and Goa.

அடுத்த செய்தி