ஆப்நகரம்

குடிநீர் இலவசமாகக் கொடுக்க வேண்டும்: மால்களுக்கு உத்தரவு

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குடிநீர் இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்று மால்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்களுக்கு பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

TNN 10 Jun 2017, 5:40 pm
பெங்களூரு: அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குடிநீர் இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்று மால்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்களுக்கு பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil mandatory for bengaluru malls restaurants to provide drinking water free
குடிநீர் இலவசமாகக் கொடுக்க வேண்டும்: மால்களுக்கு உத்தரவு


கர்நாடக மாநிலத்தின் மெட்ரோ நகரமான பெங்களூரில் உள்ள பல மால்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்களில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் குடிநீருக்கு பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது.

அண்மையில் கே.எஃப்.சி. (KFC) ரெஸ்டாரென்ட் ஒன்றிற்குச் சென்ற 42 வயதான ஒருவர், அங்கு தனக்கு இலவசமாக குடிநீர் கொடுக்க மறுத்ததாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதன் எதிரொலியாக, பெங்களூரு மாநகராட்சி அரசு அனைத்து மால்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் என்று உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி