ஆப்நகரம்

எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயம்வரம்..!

குஜராத்தில் ஹெச்.ஐ.வி எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாக சுயம்வர நிகழ்வு நடைபெற்று வருகிறது.

TNN 3 Jan 2017, 11:50 am
குஜராத்தில் ஹெச்.ஐ.வி எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாக சுயம்வர நிகழ்வு நடைபெற்று வருகிறது.
Samayam Tamil marriage fair for hiv affected persons
எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயம்வரம்..!


சில ஆண்டுகள் முன்னர் வரை உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாக எயிட்ஸ் நோய் கருதப்பட்டது.பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கிய இந்த நோய்க்கு,மருத்துவ ஆராய்ச்சிகள் காரணமாக சில மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவை எயிட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்திவிடாது என்றாலும்,இந்த மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்க முடியும்.எனவே அவர்களாலும் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியும்.

ஆனால் எயிட்ஸ் நோயாளிகள் என்பதற்காகவே அவர்கள் சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.இதுபோன்ற நபர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில்,சுயம்வர நிகழ்ச்சி ஒன்று குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்று வருகிறது.'Gujarat State Network of People' என்ற தொண்டு நிறுவனம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த நிகழ்வை நடத்தி வருகிறது.

இதுவரை சுமார் 400 எயிட்ஸ் நோயாளிகள்,இந்த சுயம்வரத்தில் பதிவு செய்துள்ளார்களாம்.பதிவு செய்தவர்களில் ஆண்களை விட பெண்கள் மிகக்குறைவாக இருப்பதால்,இந்த நிகழ்வில் பெண்கள்தான் தங்களுக்கான மணமகனை தேர்ந்தெடுப்பார்களாம்.மேலும் இந்த நிகழ்வு மூலம் திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த பல எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட தம்பதிகள்,மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார்களாம்.எனவே ஆண்டுதோறும் இந்த சுயம்வரத்திற்கு மவுசு அதிகரித்து வருகிறது.



Marriage fair for HIV affected persons

அடுத்த செய்தி