ஆப்நகரம்

மின்வெட்டு பிரச்சனை; மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சோகம்!

மின்சாரம் இல்லாததால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 25 Sep 2018, 9:50 am
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த சில நாடுகளாகவே அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் மின்சாரம் வரும் நேரம், போகும் நேரம் குறித்து பொதுமக்கள் யாருக்கும் தெரியாது.
Samayam Tamil Treatment


இதனால் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ராரன் தாலுகா மருத்துவமனையில் மின்சாரம் இல்லாத சூழலிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக டார்ச் லைட், மெழுகுவர்த்தி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களும் உதவி செய்கின்றனர்.

இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து உரிய மின்சாரம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

Medical treatment happened under candle light in Odisha Hospital.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்