ஆப்நகரம்

போலீஸ் போல் நடித்து கொள்ளை!

ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா பறிபோனது!

Samayam Tamil 4 Dec 2018, 10:28 am
சென்னையில் போலீஸ் போல் நடித்து சிறுவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கேமராவை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது
Samayam Tamil men posing as cops snatch cameras from two students in chennai


சென்னை திரிசூலம் அருகே நவீன் (16) என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது திரிசூலத்தில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தை போட்டோ எடுத்துள்ளான். இதை அவ்வழியாக வந்த இரண்டு பேர், இங்கே புகைப்படம் எடுக்கக் கூடாது என்று போலீசார் பாணியில் சிறுவர்களை மிரட்டி இரண்டு கேமராக்களையும் பிடுங்கிக் கொண்டனர். பின்னர், மீனம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்து கேமராவை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி கேமராவை கொண்டு சென்றனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த நவீன், தனது தந்தை சிவராமனை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். பின்னர், இருவரும் மீனம்பாக்கம் காவல்நிலையத்துக்கு சென்று கேமராவை கேட்டனர். அப்போது இங்கே யாரும் கேமராவை வாங்கவில்லையே என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது தான் மர்ம நபர்கள் போலீசார் போல் நடித்து கேமராவை பிடுங்கிச் சென்றிருப்பது தெரியவந்தது. பறிபோன இரண்டு கேமராக்களின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி